Thursday, November 11, 2021

ஒரு முறையாவது பேச மாட்டாயா..!


என்னுடன் யாரும் 

பேச வேண்டுமென

நான் எதிர்பார்த்ததே

இல்லை - ஆனால்

நீ ஒரு முறையாவது

பேச மாட்டாயா என

ஒவ்வொரு நொடியும்

ஏங்கினேன்..!


இத்தனை வருட தவத்தின் 

பலனா இது..,

நீயாகவே என்னிடம் 

வந்தாய்..

அப்போது கூட

உன்னிடம் மறைக்க

முயன்றேன்

அனைத்தையும் - ஆனால்

இப்போது மட்டும்

எப்படி வந்ததோ

இந்த தைரியம்

எனக்கு..!


சொல்லாத 

காதல்..,

புரியாத  

உணர்வு..,

உன்னிடம் பேசிய போது

அனைத்தையும் 

மறந்தேன்

உளறினேன் 

உன்மீது கொண்ட

காதலை..!


இப்போது உன்னுடன்

சில சண்டைகள் 

அதிகமானாலும் - அந்த

சண்டைகள் அன்பை

அதிகரிக்கவே

செய்கின்றது

உன்மீதான காதலை

குறைக்கவேயில்லை..!

No comments:

கண்கள் சிந்தும் கண்ணீர்த் துளிகள் ஓவ்வொன்றும் கவி வரிகளாக
நந்தவனத்தில் பூத்துக் குலுங்கும் பூக்களைப் பறிக்காதீர்கள்
நன்றி இனியவள்
இந்த வலைத்தளத்தில் உள்ள கவிதைகள் எனக்கு மட்டுமே சொந்தமானவைகள். தவறாக பயன்படுத்த வேண்டாம்.