என்னுடன் யாரும்
பேச வேண்டுமென
நான் எதிர்பார்த்ததே
இல்லை - ஆனால்
நீ ஒரு முறையாவது
பேச மாட்டாயா என
ஒவ்வொரு நொடியும்
ஏங்கினேன்..!
இத்தனை வருட தவத்தின்
பலனா இது..,
நீயாகவே என்னிடம்
வந்தாய்..
அப்போது கூட
உன்னிடம் மறைக்க
முயன்றேன்
அனைத்தையும் - ஆனால்
இப்போது மட்டும்
எப்படி வந்ததோ
இந்த தைரியம்
எனக்கு..!
சொல்லாத
காதல்..,
புரியாத
உணர்வு..,
உன்னிடம் பேசிய போது
அனைத்தையும்
மறந்தேன்
உளறினேன்
உன்மீது கொண்ட
காதலை..!
இப்போது உன்னுடன்
சில சண்டைகள்
அதிகமானாலும் - அந்த
சண்டைகள் அன்பை
அதிகரிக்கவே
செய்கின்றது
உன்மீதான காதலை
குறைக்கவேயில்லை..!
No comments:
Post a Comment