பார்க்காமல் இருக்க
கண்கள் பழகிக்
கொள்ளலாம்..,
பேசாமல் இருக்க
உதடுகள் பழகிக்
கொள்ளலாம் - ஆனால்
நினைக்காமல் இருக்க
இதயம் பழகிக்
கொள்ளவில்லையே..!
உண்மைக் காதலின்
எதிர்பார்ப்பு அன்பு
ஒன்றே - ஆனாலும்
உண்மைக் காதலில்
கிடைக்கும் பரிசே
கண்ணீர் தான்..!
அன்று நீ தூரத்தில்
இருந்தாலும் என்
அருகிலேயே இருப்பது
போல் உணர்ந்தேன் - ஆனால்
இன்று அருகில் இருந்தும்
நீ எனக்கில்லை
என தெரிந்தும்
என் மனதில் நீங்காத
இடம் உனக்கு
மட்டும் தான்..!
என் காதலை புரிய
வைப்பதாய் சொல்லி
இனியும் உனை
தொல்லை செய்ய
மாட்டேன் - என்றாவது
எனை நீ புரிந்து
கொள்வாய் என்ற
நம்பிக்கையில்..!
No comments:
Post a Comment