Wednesday, November 24, 2021

என்றாவது புரிந்து கொள்வாய்..!!


பார்க்காமல் இருக்க

கண்கள் பழகிக் 

கொள்ளலாம்..,

பேசாமல் இருக்க

உதடுகள் பழகிக்

கொள்ளலாம் - ஆனால்

நினைக்காமல் இருக்க

இதயம் பழகிக்

கொள்ளவில்லையே..!


உண்மைக் காதலின்

எதிர்பார்ப்பு அன்பு

ஒன்றே  - ஆனாலும் 

உண்மைக் காதலில் 

கிடைக்கும் பரிசே 

கண்ணீர் தான்..!


அன்று நீ தூரத்தில்

இருந்தாலும் என் 

அருகிலேயே இருப்பது 

போல் உணர்ந்தேன் - ஆனால்

இன்று அருகில் இருந்தும்

நீ எனக்கில்லை

என தெரிந்தும் 

என் மனதில் நீங்காத

இடம் உனக்கு 

மட்டும் தான்..!


என் காதலை புரிய

வைப்பதாய் சொல்லி

இனியும் உனை

தொல்லை செய்ய

மாட்டேன் - என்றாவது

எனை நீ புரிந்து 

கொள்வாய் என்ற

நம்பிக்கையில்..!

No comments:

கண்கள் சிந்தும் கண்ணீர்த் துளிகள் ஓவ்வொன்றும் கவி வரிகளாக
நந்தவனத்தில் பூத்துக் குலுங்கும் பூக்களைப் பறிக்காதீர்கள்
நன்றி இனியவள்
இந்த வலைத்தளத்தில் உள்ள கவிதைகள் எனக்கு மட்டுமே சொந்தமானவைகள். தவறாக பயன்படுத்த வேண்டாம்.