எவர் முன்பும்
அழ தெரியாது - என்
சோகங்கள் அனைத்தையும்
நெஞ்சுக்குள்ளே வைத்து
வாழ்ந்து கொண்டிருகிறேன்..!
வாழ்க்கையில் நான்
இழந்தவைகளோ பல..,
ஆசைப்பட்ட எதையும்
வாய்விட்டு கூறக் கூட
எனக்கு முடியவில்லை
அன்று கோழையாக
இருந்ததனால் தான்
என்னவோ இன்று
இத்தனை வலிகளையும்
நெஞ்சோடு சுமந்து
வாழ்கின்றேன்..!
என் கண்ணீரை
காட்டிதான் - உன்
காதலை பெற
முடியுமேயானால் அந்த
காதலே எனக்கு
வேண்டாம் - நீ
என்றோ ஒரு நாள்
என் காதலை
புரிந்து கொள்வாய்
என்ற நம்பிக்கையில்..!
No comments:
Post a Comment