Tuesday, November 16, 2021

தொடுவானம் தாண்டி...!




காலத்தால் எல்லா
காயங்களையும் ஆற்ற
முடியாது - ஆனால்
உன் காதல்
அத்தனை காயத்தையும்
மாற்றும் ஓர்
அற்புத மருந்து..!

உன் நெஞ்சோடு
சேர்த்து அணைக்கும்
அந்த நொடி - உன்னோடு
பல யுகங்கள் வாழ்ந்தது
போன்ற ஓர் 
இனம் புரியாத
உணர்வு..!

உன்னோடு இருக்கும்
பொழுது தொடுவானம் 
தாண்டி பறக்கும்
உணர்வு - உலகில்
ரசிக்க எவ்வளவோ
இருந்தாலும் - அனைத்தையும்
மறந்து ரசிக்கின்றேன்
உனையும் உன் 
காதலையும்..!

No comments:

கண்கள் சிந்தும் கண்ணீர்த் துளிகள் ஓவ்வொன்றும் கவி வரிகளாக
நந்தவனத்தில் பூத்துக் குலுங்கும் பூக்களைப் பறிக்காதீர்கள்
நன்றி இனியவள்
இந்த வலைத்தளத்தில் உள்ள கவிதைகள் எனக்கு மட்டுமே சொந்தமானவைகள். தவறாக பயன்படுத்த வேண்டாம்.