ஒவ்வொரு தடவையும்
புரிய வைத்து தான்
என் காதலை
நிரூபிக்க முடியும்
என்றால் - என்
இத்தனை வருட
காதலுக்கே அர்த்தம்
இல்லை..!
உன் மீது வைத்த
அதீத காதலை இன்று
உன்னிடம் கூறியும்
உன்னால் புரிந்து
கொள்ள முடியவில்லை
என்மீது தான் முற்றிலும்
தவறு - உன்னிடம்
என் இத்தனை வருட
தவத்தை சொல்லாமலே
இருந்திருக்கலாம்..!
ஆறுதலுக்காக கூட
உன்னிடம் என் காதலை
கூறியிருக்கவே கூடாது
இன்று நான் என் காதலை
தெரியப்படுத்தி உன்னை
கஷ்ரப்படுத்துவது போல்
ஆகி விட்டதே..!
உன்னிடம் எதிர்பார்ப்பது
உன் காதல் ஒன்றை
மட்டுமே - ஆனால்
நீயே எனைவிட்டு போ
என்று சொல்லாமல்
சொல்லும்போது
நானே உனைவிட்டு
விலகி செல்கிறேன்..!
என்றும் உன்மீது
வைத்திருக்கும் காதலுடன்
என்னால் முடிந்தவரை
உன்னை விட்டு தள்ளியே
நிற்கின்றேன் - இதுவே
உன் விருப்பம்
என்பதால்..!
No comments:
Post a Comment