Wednesday, December 1, 2021

!! இத்தனை வருட காதல்.. !!


ஒவ்வொரு தடவையும்

புரிய வைத்து தான்

என் காதலை

நிரூபிக்க முடியும்

என்றால் - என்

இத்தனை வருட

காதலுக்கே அர்த்தம்

இல்லை..!


உன் மீது வைத்த

அதீத காதலை இன்று

உன்னிடம் கூறியும்

உன்னால் புரிந்து

கொள்ள முடியவில்லை

என்மீது தான் முற்றிலும்

தவறு - உன்னிடம்

என் இத்தனை வருட

தவத்தை சொல்லாமலே

இருந்திருக்கலாம்..!


ஆறுதலுக்காக கூட

உன்னிடம் என் காதலை 

கூறியிருக்கவே கூடாது

இன்று நான் என் காதலை 

தெரியப்படுத்தி உன்னை

கஷ்ரப்படுத்துவது போல்

ஆகி விட்டதே..!


உன்னிடம் எதிர்பார்ப்பது

உன் காதல் ஒன்றை 

மட்டுமே - ஆனால்

நீயே எனைவிட்டு போ 

என்று சொல்லாமல்

சொல்லும்போது

நானே உனைவிட்டு

விலகி செல்கிறேன்..!


என்றும் உன்மீது 

வைத்திருக்கும் காதலுடன் 

என்னால் முடிந்தவரை 

உன்னை விட்டு தள்ளியே

நிற்கின்றேன் - இதுவே

உன் விருப்பம்

என்பதால்..!

No comments:

கண்கள் சிந்தும் கண்ணீர்த் துளிகள் ஓவ்வொன்றும் கவி வரிகளாக
நந்தவனத்தில் பூத்துக் குலுங்கும் பூக்களைப் பறிக்காதீர்கள்
நன்றி இனியவள்
இந்த வலைத்தளத்தில் உள்ள கவிதைகள் எனக்கு மட்டுமே சொந்தமானவைகள். தவறாக பயன்படுத்த வேண்டாம்.