நான் சந்தோசமாக
இல்லை - என்றாலும்
சிரித்து கொண்டே
இருப்பேன்
மற்றவர்களுக்காக..,
அந்த சிரிப்பில்
யாருக்கும் சந்தேகம்
வந்ததில்லை..!
உறவென்ற ஒன்று
உண்மையில்லாத போது
எத்தனை அர்த்தங்கள்
இருந்தென்ன - இன்னும்
இப்பூமியில் வாழ
வேண்டும் என்ற
ஆசை எண்ணம்
ஒரு துளி கூட
இல்லை - எல்லாமே
எனை விட்டு
எப்போவோ
போய்விட்டது..!
ஆனால் என்னை
அவமதித்தவர்களுக்காகவும்
அழ வைத்தவர்களுக்காகவும்
நான் அழிய வேண்டும்
என நினைத்தவர்களுக்காகவும்
இப்போதைக்கு எங்கும்
போக தயாராக இல்லை..!
No comments:
Post a Comment