Sunday, December 5, 2021

!! இப்பூமியில் வாழ..!!


நான் சந்தோசமாக

இல்லை - என்றாலும்

சிரித்து கொண்டே

இருப்பேன் 

மற்றவர்களுக்காக..,

அந்த சிரிப்பில் 

யாருக்கும் சந்தேகம்

வந்ததில்லை..!


உறவென்ற ஒன்று

உண்மையில்லாத போது

எத்தனை அர்த்தங்கள்

இருந்தென்ன - இன்னும்

இப்பூமியில் வாழ

வேண்டும் என்ற

ஆசை எண்ணம்

ஒரு துளி கூட

இல்லை - எல்லாமே

எனை விட்டு

எப்போவோ

போய்விட்டது..!


ஆனால் என்னை 

அவமதித்தவர்களுக்காகவும்

அழ வைத்தவர்களுக்காகவும்

நான் அழிய வேண்டும்

என நினைத்தவர்களுக்காகவும்

இப்போதைக்கு எங்கும்

போக தயாராக இல்லை..!

No comments:

கண்கள் சிந்தும் கண்ணீர்த் துளிகள் ஓவ்வொன்றும் கவி வரிகளாக
நந்தவனத்தில் பூத்துக் குலுங்கும் பூக்களைப் பறிக்காதீர்கள்
நன்றி இனியவள்
இந்த வலைத்தளத்தில் உள்ள கவிதைகள் எனக்கு மட்டுமே சொந்தமானவைகள். தவறாக பயன்படுத்த வேண்டாம்.