Thursday, December 9, 2021

இதயத்தில் குடியேறிய உன் நினைவு..!


வாழ்க்கை முழுவதும்

பெரிய ஆசை என்று

ஒன்றும் இல்லை - ஆனால்

பெரிதாக ஒன்றை 

மட்டும் நேசித்தேன்

அதுவே காதல் என்ற

அர்த்தத்தை புரிய

வைத்த முதல்

காதல்..!


மெய்யாக நேசித்த

உன்னை பொய்யாக

விலக நினைத்தேன்

ஆனால் இன்னும் 

அதிகமாக உன்மேல்

நேசம் வைத்து விட்டேன்

என் இதயத்தில் 

குடியேறிய உன்

நினைவுகளால்..!


உன்னை உண்மையாக

நேசித்தேன் - அதை 

இனியும் உன்னிடம் 

எப்படி புரிய வைப்பது..,

என் காயங்கள்

எல்லாம் என்னுடனே

போகட்டும் - இனியும்

புரியவைக்க 

விருப்பமுமில்லை

உன்னை தொல்லை

கொடுக்கும் எண்ணமும்

எனக்கில்லை..!


No comments:

கண்கள் சிந்தும் கண்ணீர்த் துளிகள் ஓவ்வொன்றும் கவி வரிகளாக
நந்தவனத்தில் பூத்துக் குலுங்கும் பூக்களைப் பறிக்காதீர்கள்
நன்றி இனியவள்
இந்த வலைத்தளத்தில் உள்ள கவிதைகள் எனக்கு மட்டுமே சொந்தமானவைகள். தவறாக பயன்படுத்த வேண்டாம்.