Friday, December 3, 2021

காதலின் பிரிவு..!


உனைத் தவிர

யாரையும் பின்

தொடரவில்லை

தூரமாக நீ நின்றால்

மட்டுமே உனை இமை

மூடாமல் பார்த்து

ரசிப்பேன் - ஆனால்

அருகில் நீ நின்றால்

நான் இருக்கும்

இடம் தெரியாமல்

மறைந்து விடுவேன்..!


உன் நினைவுகளோடு 

மயங்கினேன் - என் 

காதலை சொல்ல 

தயங்கினேன் - உன்

ஞாபகங்கள் அனைத்தும்

பொக்கிஷங்களாக

என் மனதில்

சிறை வைத்துள்ளேன்..!


அன்று தொடக்கம்

இன்றுவரை இனிமேலும்

உயிர் இருக்கும் வரை 

உன்னை காதலிப்பேன்

உண்மையான காதலின்

பிரிவு என்பது

மரணத்தில் மட்டுமே

அந்நாள் உன்

நினைவுகளை மட்டும்

எடுத்துச் செல்வேன்

இவ்வுலகை விட்டு..! 

No comments:

கண்கள் சிந்தும் கண்ணீர்த் துளிகள் ஓவ்வொன்றும் கவி வரிகளாக
நந்தவனத்தில் பூத்துக் குலுங்கும் பூக்களைப் பறிக்காதீர்கள்
நன்றி இனியவள்
இந்த வலைத்தளத்தில் உள்ள கவிதைகள் எனக்கு மட்டுமே சொந்தமானவைகள். தவறாக பயன்படுத்த வேண்டாம்.