Monday, December 20, 2021

மனசுக்கு தெரியவில்லையே..!




சில நிமிடம்
பேசிவிட்டு..,
பல நிமிடம்
உன்னையே
நினைக்க வைப்பது
நீ தானடா...!

உன்னை ஒரு நொடியேனும்
நினைக்க கூடாதென்று
வேறு எதிலாவது
சிந்தனையை
கொண்டு போனாலும்
உன் நினைவே
அதிலொன்றாகி
விடுகின்றது..!

இன்று உன் நினைவில்
நான் இல்லை - அது
என் புத்திக்கு
தெரிந்தாலும் மனசுக்கு
தெரியவில்லையே..!

மனசு உடையும்போது
இதயம் சிந்தும்
இரத்தத்தின்
பிரதிபலிப்பே
கண்கள் சிந்தும்
கண்ணீர்..!!

"My love was a dream.., then came true and now it is over in a dream....!"

No comments:

கண்கள் சிந்தும் கண்ணீர்த் துளிகள் ஓவ்வொன்றும் கவி வரிகளாக
நந்தவனத்தில் பூத்துக் குலுங்கும் பூக்களைப் பறிக்காதீர்கள்
நன்றி இனியவள்
இந்த வலைத்தளத்தில் உள்ள கவிதைகள் எனக்கு மட்டுமே சொந்தமானவைகள். தவறாக பயன்படுத்த வேண்டாம்.