Thursday, December 9, 2021

பேரன்பு..!!


கனவுகள் தந்தாய்

உன்னால் கனவினில்

வாழவும் பழகினேன் - ஆனால்

தேடி வந்து கனவை

நிஜமாக்கி இன்று

மீண்டும் கனவையே

தந்து விட்டாய்..!


காதலில் தோற்றவர்கள் 

எல்லோருமே காதலை

மறந்து வாழவில்லை

மனதுக்குள் மறைத்து

வாழ்கிறார்கள்..!


என்னுள் விதைத்த

உன்மீதான காதலுக்கு

என் கண்ணீர் தான்

தண்ணீர் - ஆனாலும்

உன்மேல் கொண்ட

பேரன்பால் தண்ணீர்

கூட பன்னீரே..!

No comments:

கண்கள் சிந்தும் கண்ணீர்த் துளிகள் ஓவ்வொன்றும் கவி வரிகளாக
நந்தவனத்தில் பூத்துக் குலுங்கும் பூக்களைப் பறிக்காதீர்கள்
நன்றி இனியவள்
இந்த வலைத்தளத்தில் உள்ள கவிதைகள் எனக்கு மட்டுமே சொந்தமானவைகள். தவறாக பயன்படுத்த வேண்டாம்.