கனவுகள் தந்தாய்
உன்னால் கனவினில்
வாழவும் பழகினேன் - ஆனால்
தேடி வந்து கனவை
நிஜமாக்கி இன்று
மீண்டும் கனவையே
தந்து விட்டாய்..!
காதலில் தோற்றவர்கள்
எல்லோருமே காதலை
மறந்து வாழவில்லை
மனதுக்குள் மறைத்து
வாழ்கிறார்கள்..!
என்னுள் விதைத்த
உன்மீதான காதலுக்கு
என் கண்ணீர் தான்
தண்ணீர் - ஆனாலும்
உன்மேல் கொண்ட
பேரன்பால் தண்ணீர்
கூட பன்னீரே..!
No comments:
Post a Comment