Wednesday, December 1, 2021

!! கானல் நீர்..!!


எனை பிடிக்கவில்லை

என்றால் உண்மையாகவே

எனை விட்டு விலகி விடு

சகித்து கொண்டு

தான் உன் அன்பை

நீ கொடுப்பாயானால்

என் இத்தனை வருட

காதல் - ஒரு

கானல் நீர் போலவே

இருந்திருக்கலாம்..!


நான் நன்கு அறிவேன்

உனக்கு என்மீது

அன்பு உள்ளதென்று - உன் 

வாழ்க்கை எப்பொழுதும் 

ந்தோசமாக இருக்கவே 

அன்று தொடக்கம்

உனக்காக பிரார்த்தனை

செய்த நான் இன்று

உன் சந்தோசத்தை 

கெடுப்பேன் என

நினைக்கின்றாயா..!


மனதில் எவ்வளவோ

காயங்கள் இருந்தாலும்

சில நினைவுகளே

அதற்கு மருந்தாகவும்

ஆகி விடுகிறது - இனியும்

புரிய வைக்க

விருப்பமில்லை - புரியும்போது

தெரிந்து கொள்வாய்

என் காதலை..,

அதுவே எனக்கு

போதும்..!

No comments:

கண்கள் சிந்தும் கண்ணீர்த் துளிகள் ஓவ்வொன்றும் கவி வரிகளாக
நந்தவனத்தில் பூத்துக் குலுங்கும் பூக்களைப் பறிக்காதீர்கள்
நன்றி இனியவள்
இந்த வலைத்தளத்தில் உள்ள கவிதைகள் எனக்கு மட்டுமே சொந்தமானவைகள். தவறாக பயன்படுத்த வேண்டாம்.