எனை பிடிக்கவில்லை
என்றால் உண்மையாகவே
எனை விட்டு விலகி விடு
சகித்து கொண்டு
தான் உன் அன்பை
நீ கொடுப்பாயானால்
என் இத்தனை வருட
காதல் - ஒரு
கானல் நீர் போலவே
இருந்திருக்கலாம்..!
நான் நன்கு அறிவேன்
உனக்கு என்மீது
அன்பு உள்ளதென்று - உன்
வாழ்க்கை எப்பொழுதும்
சந்தோசமாக இருக்கவே
அன்று தொடக்கம்
உனக்காக பிரார்த்தனை
செய்த நான் இன்று
உன் சந்தோசத்தை
கெடுப்பேன் என
நினைக்கின்றாயா..!
மனதில் எவ்வளவோ
காயங்கள் இருந்தாலும்
சில நினைவுகளே
அதற்கு மருந்தாகவும்
ஆகி விடுகிறது - இனியும்
புரிய வைக்க
விருப்பமில்லை - புரியும்போது
தெரிந்து கொள்வாய்
என் காதலை..,
அதுவே எனக்கு
போதும்..!
No comments:
Post a Comment