Saturday, December 4, 2021

வெறும் காவியுடையா..!!


நினைத்தவுடன் 

மறப்பதற்கும்

மறந்தவுடன் 

நினைப்பதற்கும்

என் காதல் என்ன 

வெறும் காவியுடையென

நினைத்தாயா - என்

உயிரில் செதுக்கி 

இரத்தத்தில் கலந்த 

உறவு நீ..!


என் காதல் 

உனக்கு வேடமாக 

தெரிந்தால் - என்

நாடகம் முடியும் வரை 

நீயே அதில் என் நாயகன்

என் அன்பு உனக்கு 

தொல்லை தரலாம் - ஆனால்

என்றும் துயரம்

கொடுக்காது..!


என் காதல் உண்மை

என் நேசம் உண்மை

என் வார்த்தைகள் உண்மை

என் மனம் உண்மை

என் கனவு உண்மை

நீயே என் முதல் 

காதல் - அதுவே 

என் முடிவில்லா

காதலும்..!

No comments:

கண்கள் சிந்தும் கண்ணீர்த் துளிகள் ஓவ்வொன்றும் கவி வரிகளாக
நந்தவனத்தில் பூத்துக் குலுங்கும் பூக்களைப் பறிக்காதீர்கள்
நன்றி இனியவள்
இந்த வலைத்தளத்தில் உள்ள கவிதைகள் எனக்கு மட்டுமே சொந்தமானவைகள். தவறாக பயன்படுத்த வேண்டாம்.