காலம் கடந்து
காதலை சொல்வதால்
மிஞ்சுவது என்னவோ
வலி ஒன்றே - அதை
நீயே கொடுப்பாயானால்
நான் என்ன செய்வேன்..!
நீ ஆரம்பத்தில்
என்னிடம் பேசியதற்கும்
இப்பொழுது என்னிடம்
பேசும்போதும் உள்ள
வித்தியாசம் எனக்கு
புரியும் - உன்
மனதில் என்ன உள்ளதென்று
எனக்கு தெரியாது - ஆனால்
எனை விட்டு விலக
நினைக்கின்றாய் என்று
மட்டும் அறிவேன்..!
நான் நன்கு அறிவேன்
எனை உனக்கு
பிடிக்கவில்லையென்று
அதற்கான காரணம்
கேட்டு கூட இனிமேல்
உனை தொல்லை
செய்வதாக இல்லை
இனியும் உனை
கஸ்ரப்படுத்த எனக்கு
விருப்பமும் இல்லை..!
உனை நான் எப்பொழுதும்
கஸ்ரப்படுத்த மாட்டேன்
நானே உனை விட்டு
போய் விடுகின்றேன்
என்னால் தான் உனக்கு
கஸ்ரம் என்றால் - அந்த
வலியை கூட உனக்கு
கொடுக்க மாட்டேன்..!
No comments:
Post a Comment