Sunday, December 5, 2021

!! ஆறாத ரணம்..!!


விரும்பியவர்களிடம்

எம் விருப்பத்தை கூறாமல்

இருந்ததற்கு காரணமே

அவர்களிடம் இருந்து

தவறான பதில்

கிடைத்து விடுமோ என்றே

மௌனமாக விலகி

நிற்கின்றோம்..!


அந்த விலகலுக்கான

வலி சிறிது காலத்தில்

மறைந்தால்

பரவாயில்லை - ஆனால்

ஆயுளுக்கும் மனதில் 

குடிகொண்டு ஆறாத

ரணமாய் ஆகிவிடுகிறது..!

No comments:

கண்கள் சிந்தும் கண்ணீர்த் துளிகள் ஓவ்வொன்றும் கவி வரிகளாக
நந்தவனத்தில் பூத்துக் குலுங்கும் பூக்களைப் பறிக்காதீர்கள்
நன்றி இனியவள்
இந்த வலைத்தளத்தில் உள்ள கவிதைகள் எனக்கு மட்டுமே சொந்தமானவைகள். தவறாக பயன்படுத்த வேண்டாம்.