Sunday, December 12, 2021

கருவென சுமக்கிறேன்..!


நான் கனவிலும் 

நினைக்காத ஒன்று

எனதாக நினைத்த

நீ கனவாகி

போனதே..!


கனவாகிப் போன 

நீ என்னருகில் 

இல்லையென்றாலும்

உன் நினைவுகளை

அணைத்திடுவேன்..!


கருவென சுமக்கிறேன்

காதலை நெஞ்சினில்

கானல் நீரைப்போல்

தூரத்தில் இருக்கும்

உன்னை..!


உயிருடன் கலந்த

உன்னை அந்தளவுக்கு

காதலித்து விட்டேன்

வாழ்க்கையில் 

இன்னொரு காதல்

வரப்போவதும் இல்லை

வரத் தேவையும் இல்லை..!

No comments:

கண்கள் சிந்தும் கண்ணீர்த் துளிகள் ஓவ்வொன்றும் கவி வரிகளாக
நந்தவனத்தில் பூத்துக் குலுங்கும் பூக்களைப் பறிக்காதீர்கள்
நன்றி இனியவள்
இந்த வலைத்தளத்தில் உள்ள கவிதைகள் எனக்கு மட்டுமே சொந்தமானவைகள். தவறாக பயன்படுத்த வேண்டாம்.