Saturday, December 4, 2021

உன் நினைவுகள் போதுமே..!!


ஆரம்பத்தில் இருப்பது போல்

கடைசி வரை எவருமே

எம்முடன் வருவதில்லை

இது தான் உண்மை - இதை

உணராமல் அளவுக்கதிகமாக

நேசத்தை வைத்து

இறுதியில் மிஞ்சுவது

வலி ஒன்றே..!


வலியில் இருந்தாலும் 

என் மனதில் - உன் 

நினைவுகள் என்றுமே

சுகமானது - உன்னிடம்

பொய்யுரைக்க

எனக்கு ஒன்றும்

அவசியமில்லை - ஆனால்

நீ எனை இவ்வளவு தான்

புரிந்து வைத்துள்ளாய் என

நினைக்கையில் மனதில்

வலி ஒன்றை தவிர

வேறெதுவும் இல்லை..!

No comments:

கண்கள் சிந்தும் கண்ணீர்த் துளிகள் ஓவ்வொன்றும் கவி வரிகளாக
நந்தவனத்தில் பூத்துக் குலுங்கும் பூக்களைப் பறிக்காதீர்கள்
நன்றி இனியவள்
இந்த வலைத்தளத்தில் உள்ள கவிதைகள் எனக்கு மட்டுமே சொந்தமானவைகள். தவறாக பயன்படுத்த வேண்டாம்.