ஆரம்பத்தில் இருப்பது போல்
கடைசி வரை எவருமே
எம்முடன் வருவதில்லை
இது தான் உண்மை - இதை
உணராமல் அளவுக்கதிகமாக
நேசத்தை வைத்து
இறுதியில் மிஞ்சுவது
வலி ஒன்றே..!
வலியில் இருந்தாலும்
என் மனதில் - உன்
நினைவுகள் என்றுமே
சுகமானது - உன்னிடம்
பொய்யுரைக்க
எனக்கு ஒன்றும்
அவசியமில்லை - ஆனால்
நீ எனை இவ்வளவு தான்
புரிந்து வைத்துள்ளாய் என
நினைக்கையில் மனதில்
வலி ஒன்றை தவிர
வேறெதுவும் இல்லை..!
No comments:
Post a Comment