Thursday, April 17, 2008

!!** பிறந்த நாள் வாழ்த்துக்கள் அம்மா **!!

இனியவள்
ஓவ்வொரு விடியலும்
சாதரணாமவே மலர்கின்றன...

பூக்களின் வாசனையில்
குயில்களின் இன்னிசையில்...

ஆனால் இன்றைய விடியலில்
எனக்கொர் ஆனந்தம்..

நான் இவ்வுலகைக் காண
உயிரை தூசென நினனத்து
என்னை கண்திறக்கை வைத்திட்ட
என் அன்னை பிறந்திட்ட திருநாள்...

நாட்கள் நகர வந்து போகும்
ஓவ்வொரு வருடமும்
நானும் புதிதாய் பிறக்கின்றேன்
என் அன்னையோடு...

ஆசையோடு தேடியலைந்து வாங்கிச்
சேமித்த பரிசில்களோடு காத்திருக்கிறேன்
அன்னையே உன் வருகைக்காய்
என் கனவுகள் - உன்
நிஜத்தோடு சேர்கையில்
என் நினைவுப் பொருளும்
உன் மடி சேர்ந்திடும்
என்றாவது ஓருநாள்...

காத்திருக்கிறேன் கண்களில்
ஆவலோடு
மனதினில் ஆசையோடு....

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் அம்மா

I Love U so Much அம்மா

No comments:

கண்கள் சிந்தும் கண்ணீர்த் துளிகள் ஓவ்வொன்றும் கவி வரிகளாக
நந்தவனத்தில் பூத்துக் குலுங்கும் பூக்களைப் பறிக்காதீர்கள்
நன்றி இனியவள்
இந்த வலைத்தளத்தில் உள்ள கவிதைகள் எனக்கு மட்டுமே சொந்தமானவைகள். தவறாக பயன்படுத்த வேண்டாம்.