Tuesday, April 1, 2008

!!** உயிர்ப்புள்ளி **!!

இனியவள்
வலியே நீயென
என்னை விலக்குகிறாய்
உயிரே நீயென
உன்னை பூட்டுகிறேன்..

கண்ணீரென என்னை
ஓதுக்குகிறாய்
என் கண்ணே நீயென
அணைக்கின்றேன்...

என் துன்பம் நீயென
வெறுக்கிறாய்
என் இன்பமே நீயென
அழைக்கிறேன்...

என் வாழ்வின் கரும்புள்ளி
நீயென கூறுகிறாய்
அன்பே என் வாழ்வின்
உயிர்ப்புள்ளி நீயல்லவா..!


இனியவள்

1 comment:

தமிழ் said...

அழகான
அருமையான வரிகள்

கண்கள் சிந்தும் கண்ணீர்த் துளிகள் ஓவ்வொன்றும் கவி வரிகளாக
நந்தவனத்தில் பூத்துக் குலுங்கும் பூக்களைப் பறிக்காதீர்கள்
நன்றி இனியவள்
இந்த வலைத்தளத்தில் உள்ள கவிதைகள் எனக்கு மட்டுமே சொந்தமானவைகள். தவறாக பயன்படுத்த வேண்டாம்.