Friday, March 14, 2008

!! கனவே..!!

இனியவள்


கனவுக்குள் கனவென
தோன்றிடும் - அவன்
நினைவுகளில் 
மலர்ந்திடும் - என் 
இன்பங்கள் அனைத்தும் 
விடியலில் கனவாகிப் 
போகின்றனவே..!

கண்களில் 
தவழ்ந்திடும் 
கனவுகளே.., 
நிஜங்களில் 
தவழ்ந்திட 
மாட்டாயா..!

ஆயுள் வரை 
வலி கொண்டு
உயிர் போக்கிடும் 
அவன் நினைவுகளை
கரைத்திட மாட்டாயா
கனவே..!

No comments:

கண்கள் சிந்தும் கண்ணீர்த் துளிகள் ஓவ்வொன்றும் கவி வரிகளாக
நந்தவனத்தில் பூத்துக் குலுங்கும் பூக்களைப் பறிக்காதீர்கள்
நன்றி இனியவள்
இந்த வலைத்தளத்தில் உள்ள கவிதைகள் எனக்கு மட்டுமே சொந்தமானவைகள். தவறாக பயன்படுத்த வேண்டாம்.