மழைச்சாரலின் தூறலில்
மயிலிரகாய் வருடிச்செல்லும்
உன் நினைவுகள்
காலங்கள் கடந்த போதிலும்
வசந்த காலப் பறவையாய்
என்னைச் சுற்றியே
வட்டமிடுவதுமேனோ.....
செக்கச் சிவந்த செவ்வானத்தில்
தங்கமென ஜொலித்திடும்
கடற்கரையோரத்திலே இருகரம் கோர்த்து
நாம் நடக்கையில் அலை கடல்கள்
பின்னோக்கி ஓடியதுமேனோ....
வெண்பஞ்சு தேகம் கொண்ட
முயல்குட்டிகள் துள்ளியோடுகையில்
உன் கண்களிரண்டும் என் கண்களோடு
சில்மிஷம் செய்ததேனோ...
உன் மூச்சுக் காற்று - என்
மூச்சுக் காற்றோடு கலக்கையில்
என்னுள் உன்னிதயம் படபடத்ததுமேனோ...
நீ என்னோடு பேசுகையில்
மலர்களனைத்தும் நாணத்தில்
தலை சாய்ந்து மெளனபாஷையில்
சஞ்சரிப்பதும் ஏனோ....
என்னுள் விடைதெரியா
பல கேள்விகளுக்கு விடையளிப்பாயா
ஓரே ஓரு பதில் கூறி...
மயிலிரகாய் வருடிச்செல்லும்
உன் நினைவுகள்
காலங்கள் கடந்த போதிலும்
வசந்த காலப் பறவையாய்
என்னைச் சுற்றியே
வட்டமிடுவதுமேனோ.....
செக்கச் சிவந்த செவ்வானத்தில்
தங்கமென ஜொலித்திடும்
கடற்கரையோரத்திலே இருகரம் கோர்த்து
நாம் நடக்கையில் அலை கடல்கள்
பின்னோக்கி ஓடியதுமேனோ....
வெண்பஞ்சு தேகம் கொண்ட
முயல்குட்டிகள் துள்ளியோடுகையில்
உன் கண்களிரண்டும் என் கண்களோடு
சில்மிஷம் செய்ததேனோ...
உன் மூச்சுக் காற்று - என்
மூச்சுக் காற்றோடு கலக்கையில்
என்னுள் உன்னிதயம் படபடத்ததுமேனோ...
நீ என்னோடு பேசுகையில்
மலர்களனைத்தும் நாணத்தில்
தலை சாய்ந்து மெளனபாஷையில்
சஞ்சரிப்பதும் ஏனோ....
என்னுள் விடைதெரியா
பல கேள்விகளுக்கு விடையளிப்பாயா
ஓரே ஓரு பதில் கூறி...
2 comments:
உங்களின் அனேகமான கவிதைகள் சோகமயாக இருப்பது ஏனோ...
களிப்பூட்டும் கவிதைகளை உங்களிடம் இருந்து விரைவில் எதிர்பார்க்கின்றேன்...
நந்தவனமும் கவிப்பூக்களும் மிக அழகு! தொடருங்கள்!
Post a Comment