Friday, June 10, 2022

** நீ பூக்கிறாயே...**













பிறப்பின் தருணம் 

உணர்ச்சி பூர்வமானது
அது ஒவ்வொரு
வருடமும் வந்து
செல்லும் போது
மிகவும் அழகாகிறது…!

ஒரு முறை
குறிஞ்சி மலர் பூக்க
பன்னிரண்டு வருடம்
ஆகுமென்றால்
அது பொய்தானே..,
வருடம் ஒரு முறை
குறிஞ்சி மலராய்
உன் பிறந்த நாளில்
நீ பூக்கிறாயே...!

உன்னுடைய இந்த
மகத்தான நாளிலே
நீ  பூமிக்கு வந்துதித்த
இந்நாளிலே-என்
இனிய வாழ்த்துக்களை
என் வரிகளில் பரிமாறுகிறேன்..!!

இனிய பிறந்த தின வாழ்த்துக்கள்…🎂🌹 


No comments:

கண்கள் சிந்தும் கண்ணீர்த் துளிகள் ஓவ்வொன்றும் கவி வரிகளாக
நந்தவனத்தில் பூத்துக் குலுங்கும் பூக்களைப் பறிக்காதீர்கள்
நன்றி இனியவள்
இந்த வலைத்தளத்தில் உள்ள கவிதைகள் எனக்கு மட்டுமே சொந்தமானவைகள். தவறாக பயன்படுத்த வேண்டாம்.