Tuesday, June 14, 2022

பொழிந்து செல்கிறாய்..!!

 









ஒரு உண்மையான
காதலை நீ
எவ்வளவு தான்
காயப்படுத்தினாலும்
அது மறுபடியும்
உன்னை இன்னும்
அதிகமாக நேசிக்குமே தவிர
உன்னை விட்டு
விலகி செல்லாது...!!

உன்னிடம் எதையும்
எதிர்பார்க்காத
நேரத்தில் - உன்
அன்பை வெளிப்படுத்தினாய்
இன்று உன்
அன்பை மட்டும்
எதிர்பார்க்கின்றேன் நீயோ
வெறுப்பை மட்டும்
பொழிந்து செல்கிறாய்..!

என் நண்பியிடம்
நீ கூறிய
வார்த்தைகள் என்
காதலை நீ காலடியில்
சிதைப்பதாக
இருந்தாலும் அதனால்
நீ சந்தோசம்
அடைகின்றாய் என்றால்
அப்படியே இரு
உன் சந்தோசத்தில்
வாழ்ந்து விட்டு
போகின்றேன் - என்
ஆயுள் உள்ளவரை..!!

No comments:

கண்கள் சிந்தும் கண்ணீர்த் துளிகள் ஓவ்வொன்றும் கவி வரிகளாக
நந்தவனத்தில் பூத்துக் குலுங்கும் பூக்களைப் பறிக்காதீர்கள்
நன்றி இனியவள்
இந்த வலைத்தளத்தில் உள்ள கவிதைகள் எனக்கு மட்டுமே சொந்தமானவைகள். தவறாக பயன்படுத்த வேண்டாம்.