அன்புடன் தான்
என்னுடன் பேசி
பழகினாய் என
இத்தனை நாளாக
சந்தோசமாக
இருந்தேன் - ஆனால்
கடமைக்காகவே
என இன்று
தெரியப்படுத்தினாய்...!
என் அன்பு உனக்கு
புரியவில்லை என்றாலும்
பரவாயில்லை - நீ
உனக்கு பிடித்தவர்களுடன்
சந்தோசமாக இரு...,
உன் சந்தோசம்
ஒன்றே போதும் - என்
ஆயுள் எல்லை வரை...!!
No comments:
Post a Comment