Tuesday, January 22, 2008

பூவென


என் இரு விழி இமைகளின்
திறவுகோல் உன் புன்னகை..

என் உயிர் புள்ளியில்
வீற்றிருக்கும் பூவே
உன் மெளனம் கலையாது
துடிக்காது என் இதயம்...

உன் மெளங்களின் வார்த்தைகளை
மொழி பெயர்க்க துடிக்கும் - என்
இதயத்தை தடுக்கிறது உன் இதயம்.....

சூரியனின் உதயத்தில் மலர்ந்திடும்
மலர்கள் போல் - உன்
இன்பத்தில் மலர்ந்து
துன்பம் காண்கையில்
மடிந்து போகின்றேன் பூவென...
கண்கள் சிந்தும் கண்ணீர்த் துளிகள் ஓவ்வொன்றும் கவி வரிகளாக
நந்தவனத்தில் பூத்துக் குலுங்கும் பூக்களைப் பறிக்காதீர்கள்
நன்றி இனியவள்
இந்த வலைத்தளத்தில் உள்ள கவிதைகள் எனக்கு மட்டுமே சொந்தமானவைகள். தவறாக பயன்படுத்த வேண்டாம்.