Tuesday, January 22, 2008

பூவென


என் இரு விழி இமைகளின்
திறவுகோல் உன் புன்னகை..

என் உயிர் புள்ளியில்
வீற்றிருக்கும் பூவே
உன் மெளனம் கலையாது
துடிக்காது என் இதயம்...

உன் மெளங்களின் வார்த்தைகளை
மொழி பெயர்க்க துடிக்கும் - என்
இதயத்தை தடுக்கிறது உன் இதயம்.....

சூரியனின் உதயத்தில் மலர்ந்திடும்
மலர்கள் போல் - உன்
இன்பத்தில் மலர்ந்து
துன்பம் காண்கையில்
மடிந்து போகின்றேன் பூவென...

No comments:

கண்கள் சிந்தும் கண்ணீர்த் துளிகள் ஓவ்வொன்றும் கவி வரிகளாக
நந்தவனத்தில் பூத்துக் குலுங்கும் பூக்களைப் பறிக்காதீர்கள்
நன்றி இனியவள்
இந்த வலைத்தளத்தில் உள்ள கவிதைகள் எனக்கு மட்டுமே சொந்தமானவைகள். தவறாக பயன்படுத்த வேண்டாம்.