Monday, December 17, 2007

அழகிய ஓவியம்..!

இனியவள்

எனக்குள் நீ விதைத்த
நம்பிக்கை ஒளிக்கீற்று
விண்ணளவு வளர்கின்றது
கனவாக..!

வாழ்க்கை பற்றிய 
கனவுகள் வானவில்லென 
கோலமிட்டு மின்னலென 
பளிச்சிடுகின்றது..!

நீ புதைத்த 
சோகங்கள் எனக்குள் 
உறங்கி என்னில்
துளிர்த்த இன்பங்கள்
உனக்குள் துள்ளி 
விளையாடுகின்றது..!

உன்னோடு கரைந்த 
நிமிடங்கள் ஒவ்வொரு 
பூக்களென பூத்து
பூங்காவனமென பூத்துக்
குலுங்குகின்றது - இன்பங்கள் 
வண்ணத்துப் பூச்சியென
சிறகடித்துப் பறக்கின்றது..!

உன்னோடு கலந்து விட்ட 
வாழ்க்கையிது - இன்பங்கள் 
பகிர்ந்து துன்பங்கள் 
துடைத்து புன்னகைகள் 
பரிமாறிக் கொள்ளும்
அழகிய வாழ்க்கைப் 
பயணம்...!

இதயம் போடும் 
ஆனந்தக் கூச்சல் - கண்கள் 
போடும் சந்தோஷ கோலம்
வாய்கள் முணுமுணுக்கும் 
மெல்லிசை அனைத்தும் 
உன் (நம்) பெயரே..!

என் நினைவுகள் - உன்
நினைவோடு கலக்க
என் நிஜங்கள் - உன்
நிஜங்களைத் தேடித்தேடி 
அலைகின்றது..!

என்றாவது ஒருநாள் 
என் கண்கள் உனை
சந்திக்கும் நேரம் 
அழகிய ஓவியமென
எம் நினைவுகளை
பரிசளிப்பேன் - கவிதை
தொகுப்பாக..!

1 comment:

இறக்குவானை நிர்ஷன் said...

நன்றாயிருக்கிறது. கவிதையும் வித்தியாசமான கற்பனையும். Font Colour கண்ணை உறுத்துகிறது. மாற்றுவீர்களா?

கண்கள் சிந்தும் கண்ணீர்த் துளிகள் ஓவ்வொன்றும் கவி வரிகளாக
நந்தவனத்தில் பூத்துக் குலுங்கும் பூக்களைப் பறிக்காதீர்கள்
நன்றி இனியவள்
இந்த வலைத்தளத்தில் உள்ள கவிதைகள் எனக்கு மட்டுமே சொந்தமானவைகள். தவறாக பயன்படுத்த வேண்டாம்.