வா என்கின்றாய்
வருகின்றேன்..,
போ என்கின்றாய்
போக மறுக்கின்றேன்..!
நிஜத்தைத் தீண்டாமல்
நிழல் கூட வாழ்ந்திடும்
கண்மணியே - உன்
நிழலைத் தீண்டாமல்
இந்த நிஜம் வாழ்ந்திடாது
என் கண்ணின் மணியே..!
உன் மனதின் நிலை
புரியாது தவிக்கின்றது
என் உயிரிங்கு - உன்
துன்பம் துடைத்திட
துடிக்கிறது என் இதயம்..!
உன் உயிரின் துடிப்பு
என் உயிர் அறிந்தது - ஆனால்
என் இதயத்தின் தவிப்பு
நீ அறிய மாட்டாயா..!
உன்னைக் காணாது
தவித்திடும் என்
கண்களுக்கு நிலவென
ஓளி வீசிடு என் அன்பே..!
உன் புன்னகை
தரிசிக்காது - என்
இமைகள் மூட
மறுக்கின்றது - உன்
கலகலப் பேச்சுக்
கேட்காது - என்
செவிகள் இனிமையை
இழந்து தவிக்கின்றது..!
வந்து விடு என் அன்பே
என் அன்பில் உன் அன்பைக்
கலந்து என் உயிரின்
தவிப்பை அடக்கிடு
அன்பே உன் ஓரப்
பார்வையால்..!
என்றும் என் உயிரில்
கலந்து - என்
இதயத்தில் குடியிருப்பவனே
ஒருமுறையேனும் - உன்
தரிசனம் கிடைக்கதா
என ஏங்கும்
பேதையிவள்..!
1 comment:
தங்களின் வலைப்பதிவு மிகவும் அழகாகவும் ரசிக்கத்தக்க தகவும் உள்ளது தொடர்ந்தும் உங்கள் உங்கள் கவிப்பயணம் தொடர் நிதர்ஷனின் பேனா யுத்தம் எனும் yaavarukkum .blogspot .com எனும் வலைப்பதிவு உடாக வாழ்த்துகிறோம் ! தங்கள் வலைபதிவு எமது வலைப்பதிவிலும் நான் பரசிக்கத்த திவில் இணைத்துள்ளோம் !
Post a Comment