Sunday, December 16, 2007

உயிரின் தவிப்பு..!



வா என்கின்றாய்
வருகின்றேன்..,
போ என்கின்றாய்
போக மறுக்கின்றேன்..!

நிஜத்தைத் தீண்டாமல்
நிழல் கூட வாழ்ந்திடும்
கண்மணியே - உன்
நிழலைத் தீண்டாமல்
இந்த நிஜம் வாழ்ந்திடாது
என் கண்ணின் மணியே..!

உன் மனதின் நிலை
புரியாது தவிக்கின்றது
என் உயிரிங்கு - உன் 
துன்பம் துடைத்திட
துடிக்கிறது என் இதயம்..!

உன் உயிரின் துடிப்பு
என் உயிர் அறிந்தது - ஆனால்
என் இதயத்தின் தவிப்பு
நீ அறிய மாட்டாயா..!

உன்னைக் காணாது
தவித்திடும் என்
கண்களுக்கு நிலவென
ஓளி வீசிடு என் அன்பே..!

உன் புன்னகை 
தரிசிக்காது - என் 
இமைகள் மூட 
மறுக்கின்றது - உன் 
கலகலப் பேச்சுக் 
கேட்காது - என் 
செவிகள் இனிமையை
இழந்து தவிக்கின்றது..!

வந்து விடு என் அன்பே
என் அன்பில் உன் அன்பைக்
கலந்து என் உயிரின் 
தவிப்பை அடக்கிடு 
அன்பே உன் ஓரப்
பார்வையால்..!

என்றும் என் உயிரில் 
கலந்து - என் 
இதயத்தில் குடியிருப்பவனே
ஒருமுறையேனும் - உன்
தரிசனம் கிடைக்கதா
என ஏங்கும்
பேதையிவள்..!

1 comment:

நிதர்ஷனின் பேனா யுத்தம் said...

தங்களின் வலைப்பதிவு மிகவும் அழகாகவும் ரசிக்கத்தக்க தகவும் உள்ளது தொடர்ந்தும் உங்கள் உங்கள் கவிப்பயணம் தொடர் நிதர்ஷனின் பேனா யுத்தம் எனும் yaavarukkum .blogspot .com எனும் வலைப்பதிவு உடாக வாழ்த்துகிறோம் ! தங்கள் வலைபதிவு எமது வலைப்பதிவிலும் நான் பரசிக்கத்த திவில் இணைத்துள்ளோம் !

கண்கள் சிந்தும் கண்ணீர்த் துளிகள் ஓவ்வொன்றும் கவி வரிகளாக
நந்தவனத்தில் பூத்துக் குலுங்கும் பூக்களைப் பறிக்காதீர்கள்
நன்றி இனியவள்
இந்த வலைத்தளத்தில் உள்ள கவிதைகள் எனக்கு மட்டுமே சொந்தமானவைகள். தவறாக பயன்படுத்த வேண்டாம்.