Tuesday, December 4, 2007

அன்பு வெள்ளம்..!

இனியவள்

என் இதயத்தில் 
கரைபுரண்டு ஓடுகிறதே 
உன் அன்பு வெள்ளம்..
ஓருடலில் இரு உயிர் வாழும்
அதிசயமிது..!

உன்னைச் சந்திக்கும் போது
உணர்ந்ததில்லை இந்த
பாசப் பிணணப்பை
உணர்ந்த பின்
பிரிக்க முடியவில்லை
உறவை..!

பெண்மையின் மென்மை 
கண்டேன் - உன்
அரவணைப்பில்
என் சோகம் தீர்க்கும்
அன்பான தோழி நீ
எனக்கு..!

மேகங்களுக்கிடையிலே 
வெண்தாமரை நடுவினிலே 
மின்னலென பளிச்சிடும்
உன் புன்னகையிலே 
என் புன்னகை கண்டு
சிலிர்த்த என் உள்ளமெங்கும் 
பொங்கி வழிகிறது 
உன் அன்பு..!

No comments:

கண்கள் சிந்தும் கண்ணீர்த் துளிகள் ஓவ்வொன்றும் கவி வரிகளாக
நந்தவனத்தில் பூத்துக் குலுங்கும் பூக்களைப் பறிக்காதீர்கள்
நன்றி இனியவள்
இந்த வலைத்தளத்தில் உள்ள கவிதைகள் எனக்கு மட்டுமே சொந்தமானவைகள். தவறாக பயன்படுத்த வேண்டாம்.