என் இதயத்தில்
கரைபுரண்டு ஓடுகிறதே
உன் அன்பு வெள்ளம்..
ஓருடலில் இரு உயிர் வாழும்
அதிசயமிது..!
உன்னைச் சந்திக்கும் போது
உணர்ந்ததில்லை இந்த
பாசப் பிணணப்பை
உணர்ந்த பின்
பிரிக்க முடியவில்லை
உறவை..!
பெண்மையின் மென்மை
கண்டேன் - உன்
அரவணைப்பில்
என் சோகம் தீர்க்கும்
அன்பான தோழி நீ
எனக்கு..!
மேகங்களுக்கிடையிலே
வெண்தாமரை நடுவினிலே
மின்னலென பளிச்சிடும்
உன் புன்னகையிலே
என் புன்னகை கண்டு
சிலிர்த்த என் உள்ளமெங்கும்
பொங்கி வழிகிறது
உன் அன்பு..!
No comments:
Post a Comment