Monday, December 3, 2007

!! பேசும் விழிகள் !!

இனியவள்

உன் வார்த்தைகள் மெளனமாக
என்னோடு உறவாட - என்
மெளனங்கள் வார்த்தையாக
உருப்பெற உன்மேல்
உருவான காதல் 
உயிரோடு இரண்டறக் 
கலந்தன...!

உன் மெளனம் கலைத்து
ஒர் வார்த்தை பேசாயா
என காதுகள் தவம் இருக்க
நம் விழிகள் ஆயிரமாயிரம் 
வார்த்தைகள் பரிமாறிக் 
கொண்டன...!

நினைவு எனும் பெட்டகத்தில்
விழி பேசும் வார்த்தைகள்
காவியமாக உருப்பெற்றுக் 
கொண்டிருந்தன - இதயத்தின் 
துணையுடன்...!

என் உயிர் அவனோடு 
சங்கமிக்க அவன் உயிர் 
என்னோடு கலக்க
நம் உயிர்களை இடம் 
மாற்றிக் கொண்டோம்
கனவினில்..!

No comments:

கண்கள் சிந்தும் கண்ணீர்த் துளிகள் ஓவ்வொன்றும் கவி வரிகளாக
நந்தவனத்தில் பூத்துக் குலுங்கும் பூக்களைப் பறிக்காதீர்கள்
நன்றி இனியவள்
இந்த வலைத்தளத்தில் உள்ள கவிதைகள் எனக்கு மட்டுமே சொந்தமானவைகள். தவறாக பயன்படுத்த வேண்டாம்.