Thursday, December 6, 2007

!! இனிய நினைவுகள் !!

இனியவள்

இதமான தென்றல் 
என் முகத்தில்
தவழ்த்து செல்கையில்
எனக்குள் ஊர்ந்து 
செல்கின்றது - உன் 
இனிய நினைவுகள்..!

அந்தி சாயும் வேளையில்
குழந்தையாக என் தோளில்
சாய்ந்திடும் உன் 
பொன் முகமதை
கண்டுவிட்டால் போதுமடா
என் கவலைகள்
மறைந்திடுமே..!

உன் செவ்விதழ் திறந்து
என் பெயர் சொல்லி 
அழைக்கையில் - என் 
இதயம் தவம் கிடக்கின்றது
உன் வார்த்தையை 
இசையென மாற்றிட..!

கனவில் என்னைக் 
கிச்சுக் கிச்சு மூட்டிடும் - உன் 
பிஞ்சு விரல்களின் ஸ்பரிசத்தால்
நாணிச் சிவந்த - என் 
கன்னத்தை இமைக்காமல் 
பார்த்து ரசிக்கும்
உன் கண்ணின் 
குறும்பு பிடிக்கும்..!

No comments:

கண்கள் சிந்தும் கண்ணீர்த் துளிகள் ஓவ்வொன்றும் கவி வரிகளாக
நந்தவனத்தில் பூத்துக் குலுங்கும் பூக்களைப் பறிக்காதீர்கள்
நன்றி இனியவள்
இந்த வலைத்தளத்தில் உள்ள கவிதைகள் எனக்கு மட்டுமே சொந்தமானவைகள். தவறாக பயன்படுத்த வேண்டாம்.