இதமான தென்றல்
என் முகத்தில்
தவழ்த்து செல்கையில்
எனக்குள் ஊர்ந்து
செல்கின்றது - உன்
இனிய நினைவுகள்..!
அந்தி சாயும் வேளையில்
குழந்தையாக என் தோளில்
சாய்ந்திடும் உன்
பொன் முகமதை
கண்டுவிட்டால் போதுமடா
என் கவலைகள்
மறைந்திடுமே..!
உன் செவ்விதழ் திறந்து
என் பெயர் சொல்லி
அழைக்கையில் - என்
இதயம் தவம் கிடக்கின்றது
உன் வார்த்தையை
இசையென மாற்றிட..!
கனவில் என்னைக்
கிச்சுக் கிச்சு மூட்டிடும் - உன்
பிஞ்சு விரல்களின் ஸ்பரிசத்தால்
நாணிச் சிவந்த - என்
கன்னத்தை இமைக்காமல்
பார்த்து ரசிக்கும்
உன் கண்ணின்
குறும்பு பிடிக்கும்..!
No comments:
Post a Comment