Sunday, December 9, 2007

!! கல்லறையில் வாழ்கின்றது !!


நினைவுகளில் தீக்குளித்து
நிஜத்தினிலே உயிர்க்கின்றேன்
பீனிக்ஸ் பறவையென..!

சிலிர்த்த ஆசைகளைனைத்தும்
செல்லரித்துக் கிடக்கின்றன
இதயத்தினிலே..!

கண்களை கண்ணீர் வசீகரிக்க
இதயத்தை சோகங்கள்
அணைத்துக் 
கொண்டதே..!

உன்னிடம் சொல்லாமலே 
இன்றும் என்றும்
கல்லறையில் வாழும்
என் காதல்..!

No comments:

கண்கள் சிந்தும் கண்ணீர்த் துளிகள் ஓவ்வொன்றும் கவி வரிகளாக
நந்தவனத்தில் பூத்துக் குலுங்கும் பூக்களைப் பறிக்காதீர்கள்
நன்றி இனியவள்
இந்த வலைத்தளத்தில் உள்ள கவிதைகள் எனக்கு மட்டுமே சொந்தமானவைகள். தவறாக பயன்படுத்த வேண்டாம்.