Friday, December 7, 2007

பொக்கிஷம்..!

இனியவள்

பாலைவன வாழ்க்கை
பூஞ்சோலையெனெ மணம்
வீசியது அன்பே 
உன் மீது கொண்ட
காதலினால்..!

தண்ணீரின்றி தத்தளித்த
ஓடமாய் கண்ணீரில்
தத்தளித்த என் இரவுகள்
பன்னீரில் குளிக்கிறது
உன் மீது கொண்ட
காதலினால்..!

விடியலின்றி தவித்திட்ட
வானிலே விடிவெள்ளியென
பறவையாய் பறந்து வந்து
உயிரோட்டமாய் என் 
இதயத்திலே தவழ்கின்றாய் 
அன்பே..!

என் சோகத்தை 
கவிதையாய் வடித்து
இருளை விரட்டும் 
ஓளியாய் - என் 
சோகத்தை கவிதை
வடிவில் விரட்டி
என் மகிழ்ச்சியே
இது தான் என
வாழ்கின்றேன் - என்
அன்பே..!

கிடைத்தற்கரிய 
பொக்கிஷம்
உன் காதலெனக்கு
ஆயுள்வரை காத்திடுவேன்
என் உயிர் கொண்டு..!

No comments:

கண்கள் சிந்தும் கண்ணீர்த் துளிகள் ஓவ்வொன்றும் கவி வரிகளாக
நந்தவனத்தில் பூத்துக் குலுங்கும் பூக்களைப் பறிக்காதீர்கள்
நன்றி இனியவள்
இந்த வலைத்தளத்தில் உள்ள கவிதைகள் எனக்கு மட்டுமே சொந்தமானவைகள். தவறாக பயன்படுத்த வேண்டாம்.