தகமைகள் பார்த்து
வருவதில்லை அன்பு
மலர்களின் நிறங்களில்
மனதை இழந்து வண்டுகள்
பூவை நாடுவது போல்
உன் அன்பை என் உயிரால்
உணர்ந்து என்னை உனக்குள்
புதைக்கின்றேன் புதையலாய்..!
குழந்தையை உவகையோடு
அணைத்து முத்தமிடும்
அன்னையாய் உன்னை
அரவணைக்கின்றேன்
நினைவிலும் கனவிலும்..!
கோடியாண்டுகள் செல்ல
வைரமென ஜொலித்திடும்
நட்சத்திரமாய் நிமிடங்கள்
கரைய கரைய - என்
அன்பு மின்னுகின்றது
உயிராய் உன் உயிருக்குள்..!
No comments:
Post a Comment