Monday, December 3, 2007

காத்திருக்கின்றேன்..!

இனியவள்

இயற்கை அனைத்தும் 
மண்டியிடுகின்றது - உன்
அன்பின்பால் ஈர்க்கப்பட்டு..
என்பால் எப்பொழுது 
ஈர்க்கப்படுவாய்
இரும்பைக் கவரும் 
காந்தமாய்...!

அன்பே உன் இதயம் 
இரும்பல்லவே - உணர்ச்சிகள் 
கொண்டு செதுக்கப்பட்ட
அழகிய சிற்பம் அல்லவா..!

உணர்ச்சிகளுக்கு வேலிகள்
போட்டென்னை - சோகம் 
என்னும் நரகத்தில் 
தள்ளிவிடாதே..!

கண்ணை மூடி 
பால் குடிக்க நினைக்காதே
பூனைபோல் ஏமாறுவது 
நீ அல்ல நானே...!

வேலி என்னும் 
ஆடை பூண்டு
கருமேகமாய் 
காட்சியளிக்கின்றாய்
மழை என்னும் 
அன்பு பொழிந்து
எப்பொழுது 
வெண்மேகம் ஆவாய்..!

காத்திருக்கின்றேன் 
உனக்குள் பிறக்கபோகும் 
காதல் என்னும்
குழந்தைக்கு 
தாயாய் ஆவதற்கு...!

No comments:

கண்கள் சிந்தும் கண்ணீர்த் துளிகள் ஓவ்வொன்றும் கவி வரிகளாக
நந்தவனத்தில் பூத்துக் குலுங்கும் பூக்களைப் பறிக்காதீர்கள்
நன்றி இனியவள்
இந்த வலைத்தளத்தில் உள்ள கவிதைகள் எனக்கு மட்டுமே சொந்தமானவைகள். தவறாக பயன்படுத்த வேண்டாம்.