பூக்கள் மேல்
பன்னீர் தெளித்திடும்
மழைபோல்..,
வானத்தில் கோலம்
போட்டுச் செல்லும்
வானவில்லை போல்..,
கண்கள் ரசிக்க - உன்
விரல்கள் என்
விரல்களோடு சில்மிஷம்
செய்திட - நாணத்தில்
என் கால் கட்டைவிரல்
பூமியில் கோலமிடுவது போல்
அன்று நான் கண்ட கனவு
அனைத்தும் இன்று
என்னால் ரசிக்க
முடியவில்லை
இதயத்திலே நீ
வலிகளின் ரேகைகளால்..!
No comments:
Post a Comment