Wednesday, December 5, 2007

ரசிக்க முடியவில்லை..!



பூக்கள் மேல் 
பன்னீர் தெளித்திடும்
மழைபோல்..,
வானத்தில் கோலம் 
போட்டுச் செல்லும் 
வானவில்லை போல்..,
கண்கள் ரசிக்க - உன்
விரல்கள் என் 
விரல்களோடு சில்மிஷம் 
செய்திட - நாணத்தில்
என் கால் கட்டைவிரல்
பூமியில் கோலமிடுவது போல் 
அன்று நான் கண்ட கனவு
அனைத்தும் இன்று 
என்னால் ரசிக்க
முடியவில்லை 
இதயத்திலே நீ
வலிகளின் ரேகைகளால்..!


No comments:

கண்கள் சிந்தும் கண்ணீர்த் துளிகள் ஓவ்வொன்றும் கவி வரிகளாக
நந்தவனத்தில் பூத்துக் குலுங்கும் பூக்களைப் பறிக்காதீர்கள்
நன்றி இனியவள்
இந்த வலைத்தளத்தில் உள்ள கவிதைகள் எனக்கு மட்டுமே சொந்தமானவைகள். தவறாக பயன்படுத்த வேண்டாம்.