இரவின் நிழலில்
சிறு ஒளியின்
குடையின் கீழ்
பூ பூக்கும்
நினைவுகளே..!
ஆர்ப்பாரிக்கும்
அலைகளில் -அள்ளித்
தெளிக்கும்
நீர்க்குமிழிகள் போல்
வந்து வந்து செல்லும்
நினைவலைகளே..!
விட்டில் பூச்சியென
நினைவுத் தீயினிலே
என் கனவுகளை
எரித்து சாம்பலென
கரைக்கின்றேன்
கண்ணீரிலே..!
No comments:
Post a Comment