Saturday, December 1, 2007

நினைவுகளே..!

இனியவள்
இரவின் நிழலில்
சிறு ஒளியின்
குடையின் கீழ்
பூ பூக்கும்
நினைவுகளே..!

ஆர்ப்பாரிக்கும் 
அலைகளில் -அள்ளித் 
தெளிக்கும் 
நீர்க்குமிழிகள் போல்
வந்து வந்து செல்லும்
நினைவலைகளே..!

விட்டில் பூச்சியென
நினைவுத் தீயினிலே
என் கனவுகளை 
எரித்து சாம்பலென 
கரைக்கின்றேன்
கண்ணீரிலே..!

No comments:

கண்கள் சிந்தும் கண்ணீர்த் துளிகள் ஓவ்வொன்றும் கவி வரிகளாக
நந்தவனத்தில் பூத்துக் குலுங்கும் பூக்களைப் பறிக்காதீர்கள்
நன்றி இனியவள்
இந்த வலைத்தளத்தில் உள்ள கவிதைகள் எனக்கு மட்டுமே சொந்தமானவைகள். தவறாக பயன்படுத்த வேண்டாம்.