காற்றில் பறக்கும்
காற்றாடியாய்
பறக்கின்றது - உன்
நினைவுகள்
என் மனதினிலே..!
வயலில் பூத்துக் குலுங்கும்
நெல் மணிகளாய் - உன்
புன்னகைத் துளிகள்..!
வயலின் இசை கேட்க
துடித்த காதுகள் - இன்று
உன் குரல் கேட்க
துடிக்கின்றன..!
மெளனம் கலையா இரவுகளை
உன் நினைவுகள் துயில்
எழுப்புகின்றன..!
வானத்தில் ஜொலிக்கும்
நட்சத்திரங்களுக்கு இடையில்
பன்னீர் சிந்தும் மழைத்துளியாய்
என் கண்ணீர்த் துளிகள்..!
உனைப் பார்த்த போது
தெரியவில்லை - பல
இரவுகள் விடியா இரவுகளாய்
மலரும் - உன்
நினைவுகளிலேயென..!
விடியலை எதிர் நோக்கும்
சூரியன் போல
இரவுகளை எதிர் நோக்குகின்றேன்
கனவு எனும் உலகத்தில் - என்
உயிர் நாடியாய்
உன்னை சுவாசிக்க..!
No comments:
Post a Comment