Monday, December 3, 2007

!! உயிர் நாடியாய் !!

இனியவள்


காற்றில் பறக்கும்
காற்றாடியாய் 
பறக்கின்றது - உன் 
நினைவுகள்
என் மனதினிலே..!

வயலில் பூத்துக் குலுங்கும்
நெல் மணிகளாய் - உன்
புன்னகைத் துளிகள்..!

வயலின் இசை கேட்க
துடித்த காதுகள் - இன்று
உன் குரல் கேட்க
துடிக்கின்றன..!

மெளனம் கலையா இரவுகளை
உன் நினைவுகள் துயில்
எழுப்புகின்றன..!

வானத்தில் ஜொலிக்கும்
நட்சத்திரங்களுக்கு இடையில்
பன்னீர் சிந்தும் மழைத்துளியாய்
என் கண்ணீர்த் துளிகள்..!

உனைப் பார்த்த போது
தெரியவில்லை - பல 
இரவுகள் விடியா இரவுகளாய் 
மலரும் - உன் 
நினைவுகளிலேயென..!

விடியலை எதிர் நோக்கும்
சூரியன் போல 
இரவுகளை எதிர் நோக்குகின்றேன்
கனவு எனும் உலகத்தில் - என்
உயிர் நாடியாய் 
உன்னை சுவாசிக்க..!

No comments:

கண்கள் சிந்தும் கண்ணீர்த் துளிகள் ஓவ்வொன்றும் கவி வரிகளாக
நந்தவனத்தில் பூத்துக் குலுங்கும் பூக்களைப் பறிக்காதீர்கள்
நன்றி இனியவள்
இந்த வலைத்தளத்தில் உள்ள கவிதைகள் எனக்கு மட்டுமே சொந்தமானவைகள். தவறாக பயன்படுத்த வேண்டாம்.