Wednesday, December 5, 2007

!! இருண்ட வாழ்வு !!

இனியவள்


மேகங்கள் ஒன்றுக்குள் 
ஓன்று மறைவது போல்
துன்பத்துக்குள் ஓளிந்து
கொள்கிறது இன்பம்..!

நீண்ட இரவுகள்
முடிவில்லா நினைவுகள்
விடிந்தும் விடியா கனவுகள்
தொலைதூர புன்னகை
இவையனைத்தும் எனது
அடையாளச் சின்னங்கள்..!

தீக்குச்சிப் பார்வையால் 
அன்று தெப்பமான 
என் மேனி தீயென 
எரிகின்றதே இன்று
தப்ப வழி ஏது
உன் கழுகுப் பார்வை
என்னைச் சுற்றி
வட்டமிடுவதனால்..!

இருண்ட வாழ்வுக்குள்
ஓளிவீசிய உன் அன்பு
இன்று இருளைக் கூட
காணமுடியாமல் 
கண்ணையும்
பறித்துச் சென்றுவிட்டது
என் அன்பே..!!

No comments:

கண்கள் சிந்தும் கண்ணீர்த் துளிகள் ஓவ்வொன்றும் கவி வரிகளாக
நந்தவனத்தில் பூத்துக் குலுங்கும் பூக்களைப் பறிக்காதீர்கள்
நன்றி இனியவள்
இந்த வலைத்தளத்தில் உள்ள கவிதைகள் எனக்கு மட்டுமே சொந்தமானவைகள். தவறாக பயன்படுத்த வேண்டாம்.