Wednesday, December 5, 2007

உடைந்த கண்ணாடியாய்...!




ஒன்றாய் சேர்ந்து
சிரித்திடும் பொழுதினிலே
தெரியவில்லை வரும் காலம்
கண்ணீரில் கரைந்திடுமென..!

உன் வார்த்தைகள் 
ஓவ்வொன்றும் அழகிய 
பரிசுகளடா எனக்கு..,
பார்த்து பார்த்து 
ரசித்திடவல்ல
நினைத்து நினைத்து
தீயினில் எரிந்திட..!

அழகிய வாழ்க்கையென
நினைத்தேன் - ஆனால்
அலங்கோலமாகியது..,
கவலைகளற்ற வாழ்க்கை
இன்று உடைந்த 
கண்ணாடியாய்..!




No comments:

கண்கள் சிந்தும் கண்ணீர்த் துளிகள் ஓவ்வொன்றும் கவி வரிகளாக
நந்தவனத்தில் பூத்துக் குலுங்கும் பூக்களைப் பறிக்காதீர்கள்
நன்றி இனியவள்
இந்த வலைத்தளத்தில் உள்ள கவிதைகள் எனக்கு மட்டுமே சொந்தமானவைகள். தவறாக பயன்படுத்த வேண்டாம்.