ஒன்றாய் சேர்ந்து
சிரித்திடும் பொழுதினிலே
தெரியவில்லை வரும் காலம்
கண்ணீரில் கரைந்திடுமென..!
உன் வார்த்தைகள்
ஓவ்வொன்றும் அழகிய
பரிசுகளடா எனக்கு..,
பார்த்து பார்த்து
ரசித்திடவல்ல
நினைத்து நினைத்து
தீயினில் எரிந்திட..!
அழகிய வாழ்க்கையென
நினைத்தேன் - ஆனால்
அலங்கோலமாகியது..,
கவலைகளற்ற வாழ்க்கை
இன்று உடைந்த
கண்ணாடியாய்..!
No comments:
Post a Comment