Saturday, December 8, 2007

சாந்தி தருவாயா.....?



காதலனே என் காதலனே
மெழுகாய் நான் உருகி
நிலவென ஒளிர்கின்றேன்
உன் இருளுக்குள்..!

அன்பே என் அன்பே
காதல் நான் செய்கையில்
எனக்குள் உன்னை
உருமாற்றுகின்றேன் 
என் குழந்தையாய்..!

என் வெட்கத்தினால்
என் ஆசைகளனைத்தும்
ஒளிந்து கொள்கின்றன
என் கண்களுக்குள்ளே...!

அன்பே உன் புன்சிரிப்பில்
பூலோகம் சாய்ந்ததே
கண்ணே உன் கனியமுதில்
என் இளமை பொங்கியதே..!

உயிரே என் உயிரே
என் உயிரை வாங்கும்
என்னவே - என் 
நிழலென வரும் உன் 
நினைவுகளை யாசகமாய் 
வாங்கிச் செல்லடா
உன் நிழலில் இருந்து கசியும்
இனிமைகளால் என் 
இதயம் நிம்மதியின்றி 
தவிக்கின்றதே..!

என்னிலிருந்து உனைப் 
பிரித்து - என் 
இதயத்திற்கு சாந்தி தருவாயா
என் அன்பே..!

No comments:

கண்கள் சிந்தும் கண்ணீர்த் துளிகள் ஓவ்வொன்றும் கவி வரிகளாக
நந்தவனத்தில் பூத்துக் குலுங்கும் பூக்களைப் பறிக்காதீர்கள்
நன்றி இனியவள்
இந்த வலைத்தளத்தில் உள்ள கவிதைகள் எனக்கு மட்டுமே சொந்தமானவைகள். தவறாக பயன்படுத்த வேண்டாம்.