Wednesday, December 5, 2007

என்றென்றும் காத்திடுவேன்..!

இனியவள்

இனிமை எனை அணைக்க
தனிமை எனைக் கொல்ல
உள்ளத்தினிலே அலை மோதும்
காதல் வெள்ளத்தினிலே
கசப்புக்கள் அடித்துச் செல்ல
மறக்கவும் முடியாமல்
நினைக்கவும் முடியாமல்
என் இதயம் கண்ணீரிலே மூழ்க
என்னுயிர் தத்தெடுக்கின்றது
என்னவனை புத்தம் புது மலராய்..!

உன்மீது கொண்ட 
காதல் என்னுயிரிலே 
அனலைக் கக்க
தென்றலென வீசிடும்
காதல் - மேகமென
மழை பொழிந்திட
என் உள்ளம்
துன்பம் இன்பமெனும்
அலை கடலிலே
தத்தளிக்கின்றது..!

உன் உயிர் கொண்டு
காதலை உருக்கிடு
உன் இதயம் கொண்டு
அன்பை பூசித்திடு
என் காலமெல்லாம்
உன்னோடான காதல்
வாழட்டும் என்னுடன் - என
வாழ்த்திடுவேன் நான்
என்றென்றும்..!

No comments:

கண்கள் சிந்தும் கண்ணீர்த் துளிகள் ஓவ்வொன்றும் கவி வரிகளாக
நந்தவனத்தில் பூத்துக் குலுங்கும் பூக்களைப் பறிக்காதீர்கள்
நன்றி இனியவள்
இந்த வலைத்தளத்தில் உள்ள கவிதைகள் எனக்கு மட்டுமே சொந்தமானவைகள். தவறாக பயன்படுத்த வேண்டாம்.