Thursday, October 4, 2012

காத்திருப்பு...!




என்னைத் தீண்டும்
உந்தன் சுவாசம் 

கொஞ்சம் கொஞ்சம்
காதல் பேசும்..!

என்னைத் தீண்டா
உந்தன் நேசம் 
கொஞ்சம் கொஞ்சம்
என்னைக் கொல்லும்..!


வார்த்தையொன்று சொல்லி
விட்டால் - வாழ்ந்து விடுவேன்
அந்தன் சொல்லில் -  
வீழ்ச்சியொன்று
தாக்குமுன்னே வந்து விடு
எந்தன் கண்ணே..!

உந்தன் கண்கள் 
பேசும் வார்த்தையொன்றே
எந்தன் இதயம் வேண்டும்
வரம் அன்பே...!

காதலென்ற ஓற்றைச் 
சொல்லில் பற்றுக்
கொள்ளும் காலமிது
நீயின்றி போகும் போது
வாழ்க்கையின்றி
போகுதன்பே..!

No comments:

கண்கள் சிந்தும் கண்ணீர்த் துளிகள் ஓவ்வொன்றும் கவி வரிகளாக
நந்தவனத்தில் பூத்துக் குலுங்கும் பூக்களைப் பறிக்காதீர்கள்
நன்றி இனியவள்
இந்த வலைத்தளத்தில் உள்ள கவிதைகள் எனக்கு மட்டுமே சொந்தமானவைகள். தவறாக பயன்படுத்த வேண்டாம்.