Monday, October 15, 2012

மெளனம்...!




தீண்டும் காற்றினில்
சிலிர்த்திடும் மேனிபோல்
செல்லரித்திடும் வார்த்தைகளில்
உறங்குகிறது காயமெனும்
ஆயுதம்...!

வலிதாங்கிடும் நெஞ்சத்திலே
மெளனித்திடும் அன்பினில்
சமாதியாகின்றன உறவுகள்..!

எத்தனை எத்தனையாயிரம்
கல்லறைகள் கட்டிக்கொள்கின்றன
இந்த நிசப்தங்கள்..!

மெளனமே நீ கலைந்தாலும்
காணாமல் போகாது நீ
உண்டாக்கிச் சென்ற காயங்களில்
வ(லி)டுக்கள்...!

1 comment:

சீராளன்.வீ said...

மெளனமே நீ கலைந்தாலும்
காணாமல் போகாது நீ
உண்டாக்கிச் சென்ற காயங்களில்
வ(லி)டுக்கள்...!

nice lines

கண்கள் சிந்தும் கண்ணீர்த் துளிகள் ஓவ்வொன்றும் கவி வரிகளாக
நந்தவனத்தில் பூத்துக் குலுங்கும் பூக்களைப் பறிக்காதீர்கள்
நன்றி இனியவள்
இந்த வலைத்தளத்தில் உள்ள கவிதைகள் எனக்கு மட்டுமே சொந்தமானவைகள். தவறாக பயன்படுத்த வேண்டாம்.