தீண்டும் காற்றினில்
சிலிர்த்திடும் மேனிபோல்
செல்லரித்திடும் வார்த்தைகளில்
உறங்குகிறது காயமெனும்
ஆயுதம்...!
வலிதாங்கிடும் நெஞ்சத்திலே
மெளனித்திடும் அன்பினில்
சமாதியாகின்றன உறவுகள்..!
எத்தனை எத்தனையாயிரம்
கல்லறைகள் கட்டிக்கொள்கின்றன
இந்த நிசப்தங்கள்..!
மெளனமே நீ கலைந்தாலும்
காணாமல் போகாது நீ
உண்டாக்கிச் சென்ற காயங்களில்
வ(லி)டுக்கள்...!
1 comment:
மெளனமே நீ கலைந்தாலும்
காணாமல் போகாது நீ
உண்டாக்கிச் சென்ற காயங்களில்
வ(லி)டுக்கள்...!
nice lines
Post a Comment