உன் மரணம் தந்த
அதிர்வலைகள்
இன்றும் என்னுள்
நிழற்படமாய்..
அன்று என்னைத் தீண்டிய
உன் விழிகளின்
ஆழப்பார்வையின்
அர்த்தங்கள் இன்று
என்னுள் வலி தாங்கும்
படலம்...
என்னை நீ அழைத்த
அந்த தருணம்
நான் என்னை மீண்டும்
தொலைத்த நிமிடம்
நீ இவ்வுலகில்
இல்லையெனிலும்
என்றும் என்னுள்
உயிரோட்டமாய்
வாழ்கிறாய்...!
No comments:
Post a Comment