Wednesday, October 3, 2012



உன் மரணம் தந்த 
அதிர்வலைகள்
இன்றும் என்னுள் 
நிழற்படமாய்..

அன்று என்னைத் தீண்டிய
உன் விழிகளின் 
ஆழப்பார்வையின்
அர்த்தங்கள் இன்று
என்னுள் வலி தாங்கும்
படலம்...

என்னை நீ அழைத்த
அந்த தருணம் 
நான் என்னை மீண்டும்
தொலைத்த நிமிடம்

நீ இவ்வுலகில் 
இல்லையெனிலும்
என்றும் என்னுள்
உயிரோட்டமாய் 
வாழ்கிறாய்...!

No comments:

கண்கள் சிந்தும் கண்ணீர்த் துளிகள் ஓவ்வொன்றும் கவி வரிகளாக
நந்தவனத்தில் பூத்துக் குலுங்கும் பூக்களைப் பறிக்காதீர்கள்
நன்றி இனியவள்
இந்த வலைத்தளத்தில் உள்ள கவிதைகள் எனக்கு மட்டுமே சொந்தமானவைகள். தவறாக பயன்படுத்த வேண்டாம்.