கண்கள் சிந்தும்
கண்ணீர் - நீ
தெளித்து சென்ற
பன்னீர்
எந்தன் காதல்
சொல்ல - நான்
உந்தன் நிழல்
ஆவேன்..!
காத்துக்கொண்டு
நின்றால் - காலமென்னை
கொல்லும் - உந்தன்
கண்கள் தீண்டிச் சென்றால்
எந்தன் பாலைவனம்
பூக்கும்..,,!
உன் காதலின்றி போனால்
என் மூச்சு நின்று
போகும்..!
நிலவைப் போல தேய்ந்தேன்
உன் பூ முகம் காண
காதல்தனைக் கொண்டால்
காலம் காற்றய்
ஓடும்..,
உந்தன் கரம் கொண்டால்
எந்தன் உயிர் நீழும்
எந்தன் காரம் கொண்டால்
உந்தன் வாழ்வு
சொர்க்கம்..!
1 comment:
அருமையான வரிகள்
பாராட்டுக்கள்
தமிழ்த்தோட்டம்
www.tamilthottam.in
Post a Comment