உன்னைக் காண்கையில்
காணாமல் போய்விடும்
என் சோகங்கள்...
உன்னை காணாமல் தவித்திடும்
என்னிரு விழிகள்....
உயிரால் உன்னைத் தேடி
இதயத்தில் பாதுகாக்கின்றேன்...
பிரிவுகளின் நிழலில்
சோகத்தின் பிடியில்
தத்தளித்த என்னை
இசையென மாற்றி
இன்னிசை பாடிட வைத்திடும்
என் கண்மணியே
நீயின்றி விடிந்திடாது
என் இரவுகள்
நீயின்றி தூங்கிடாது
என் விழிகள்....
உன்னோடு நான் பேசிய வார்த்தைகள்
எனக்குள் என்னை உருமாற்றி
உனக்குள் என்னை
நிலைநிறுத்திடும் என்றென்றும்...
என்னை உனக்குள் தேடி
உன்னை எனக்குள்
கண்டு கொண்டேன்...
No comments:
Post a Comment