Wednesday, February 13, 2008

பொய்களின் அஸ்திவாரத்தில்..!


பொய்களின் அஸ்திவாரத்தில்
புலம்பித் தவிக்கிறது 
காதல் குழந்தை...


கண்ணுக்குள் உன்னை குடியிருத்தி
பார்வையற்றவளாய் வாழ்ந்து
உன் பிரிவால் உண்டான
பார்வையின் வெளிச்சம்
என் உயிரை கூசச் செய்கின்றதே....

உன் நினைவுகளின்றி
கரைய மறுத்த இரவுகள்
உன் நினைவுகள் கலையாமல்
கரைய மறுக்கின்றது
சூரியனில்....

தாலாட்டென தாலாட்டிய
உன்னோடான கனவுகள்
இன்று என் தூக்கம் கலைத்து
துக்கத்தில் தள்ளுகின்றனவே
என் இனிமைகளை....!

உயிர் கரைந்தாலும் கரைந்திடாத
உன்மேலான என் காதலை அன்பே
என் உணர்வு கொன்று
கலைக்க முயற்சிக்கின்றாயே...!

உன் நிழலில் வாழ்ந்திட்ட உயிரிது
உன் நிழலின்றித் தவிக்கின்றது
அனலென உன் நினைவுகள்
என்னைத் தாக்கும் போது...!

No comments:

கண்கள் சிந்தும் கண்ணீர்த் துளிகள் ஓவ்வொன்றும் கவி வரிகளாக
நந்தவனத்தில் பூத்துக் குலுங்கும் பூக்களைப் பறிக்காதீர்கள்
நன்றி இனியவள்
இந்த வலைத்தளத்தில் உள்ள கவிதைகள் எனக்கு மட்டுமே சொந்தமானவைகள். தவறாக பயன்படுத்த வேண்டாம்.