Thursday, February 28, 2008

!! தெரியவில்லை.. !!



அமைதியே உருப்பெற்ற 
உன்னிடம் எப்படி 
வந்தது - இந்த 
அகங்காரம்...!

பூமாதேவியே 
நீயென பார்த்து
பொறாமைப்பட 
வைத்த - உன் 
பொறுமை எங்கே
நேற்று வந்த புயலில்
அடித்துச் செல்லப்பட்டு 
விட்டதா...!

அமைதியே வடிவான 
உன் திருமுகம்
இன்று அமைதியற்ற 
கடல் போல்
ஆர்ப்பாரித்துக் 
கொண்டு
இருக்கின்றதே...!

எதை மறைக்க 
போடுகின்றாய்
இந்த வேஷம் − உன்
மனதையா இல்லை
மனதை வருத்தும் 
வலிகளையா..,
காரணம் சொல் 
பெண்ணே - எந்த 
சுனாமி வந்து
உன் இதயத்தை
அடித்து சென்று 
விட்டது..!

No comments:

கண்கள் சிந்தும் கண்ணீர்த் துளிகள் ஓவ்வொன்றும் கவி வரிகளாக
நந்தவனத்தில் பூத்துக் குலுங்கும் பூக்களைப் பறிக்காதீர்கள்
நன்றி இனியவள்
இந்த வலைத்தளத்தில் உள்ள கவிதைகள் எனக்கு மட்டுமே சொந்தமானவைகள். தவறாக பயன்படுத்த வேண்டாம்.