கற்பனைத் தந்திகளை
மீட்டுகையில் கானமென
இசைமீட்டிடும் கவிதை
நீயெனக்கு....!
என் மூச்சுக் காற்றில்
இதயத்தோடு கலந்து
சில்மிஷம் செய்திடும்
உயிரும் நீ...!
கண்மூடி திறக்கையில்
நிழலாடி வரும்
உன் உருவம் காண்கையில்
காணாமல் போகின்றது
கண்களில் கண்ணீர்த்
துளிகள்...!
தித்திக்கும் கனவுகளில்
திகட்டாமல் கண்சிமிட்டிச்
செல்லும் கண்மணியே
கண்களைத் தீண்டி
கனவோடு கலந்து
உயிருக்குள் நுழைந்து
விட்டாய்...!
காதலர் தினமான
இன்று உன்னிடம்
என் காதலை சொல்ல
துடிக்கின்றேன் - ஆனால்
அதே காதலை நீயோ
வேறோருவருக்கு
கொடுக்கையில்- நானும்
என் காதலும் இன்று
உயிரற்ற சமாதியாக..!
நான் மறைந்தாலும்
என் காதலது வாழும்
உயிரோட்டமாய்
கவிதை வரிகளாக
அன்றாவது புரிந்து
கொள்வாயா இப்
பேதையவள் கொண்ட
காதலை - என்
செல்லப் பெயரே..!
No comments:
Post a Comment